.

வணக்கம்! உங்களை வரவேற்கிறேன்!பார்க்க ஜெயா TV...படிக்க... நமது M.G.R நாளிதழ்.தூத்துக்குடி பெருநகர அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் உங்களை வரவேற்கிறது.

Tuesday, June 29, 2010

பெட்ரோல் டீசல் உயர்வை கண்டித்து பொது வேலைநிறுத்தம்

பெட்ரோல்,டீசல் விலை உயர்வை கண்டித்தும் திரும்ப பெறகூறியும் வரும் ஜூலை 5 இல் நாடு தழுவிய பொது வேலை நிறுத்தம் (strike) நடைபெறும் என்று புரட்சிதலைவி டாக்டர் அம்மா அவர்கள் அறிவித்துள்ளர்கள்.இந்த வேலை நிறுத்ததிற்கு கூட்டணி கட்சிகளும் ஆதரவு தெரிவித்து உள்ளது.எனவே,இந்த
வேலை நிறுத்ததிற்கு பொதுமக்களும் கழக உடன்பிறப்புகளும் ஆதரவு நல்க வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன்.
இவண்
ஏ.பி.டேனியல்
அம்மாவின் முரட்டு பக்தன்

Sunday, June 27, 2010

ஆழ்ந்த இரங்கல்

27-06-2010 அன்று தூத்துக்குடி பெருநகரம் 6 வது வார்டு பாசறை பொருளாளர் நண்பர் பாலா அவர்கள் குற்றாலம் செல்லும் வழியில் சாலை விபத்தில் சிக்கி அகால மரணம் அடைந்தார்கள் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.நகர பாசறை செயலாளர் நம்பி ராஜன் அவர்கள் தன்னுடையஆழ்ந்த இரங்கலை தெரிவித்து உள்ளார். அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கு தூத்துக்குடி பெருநகர அண்ணா திராவிட முனேற்ற கழகம் ஆழ்த்த இரங்கலை தெரிவித்து கொள்கிறது.மேலும் அவரது ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறது.

Thursday, June 24, 2010

டாக்டர் - நகர பாசறை செயலாளர் சந்திப்பு

24-06-2010 அன்று மாநில இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் டாக்டர் S. வெங்கடேஷ் அவர்கள் தென்காசி இல் நடைபெற்ற நெல்லை புறநகர் அம்மா பேரவை இணை செயலாளர் திரு.இசக்கி சுப்பையா அவர்களின் இல்ல திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக வருகை புரிந்தார்.தூத்துக்குடி நகர பாசறை செயலாளர் நம்பிராஜன் அவர்கள்
மரியாதை நிமித்தமாக டாக்டர் அவர்களை சென்று சந்தித்து ஆசி பெற்றார் .இந்த சந்திப்பின் போது Ex. தூத்துக்குடி மாவட்ட செயலாளர் இரா.ஹென்றி அவர்கள் உடனிருந்தார்.

Monday, June 21, 2010

கண்டன ஆர்ப்பாட்டம்


இன்று உயர் நீதிமன்றத்தில் தமிழ் மொழியை வழக்காடு மொழியாக அறிவிக்க தவறிய மத்தியஅரசு ,மாநில அரசுகளை கண்டித்து தூத்துக்குடி ராஜாஜி பூங்கா முன்பு அண்ணா திராவிட முனேற்ற கழகத்தின் கூட்டணி கட்சிகளின் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .மாவட்ட வழகாறினார் பிரிவு மற்றும் மாவட்ட மாணவர் அணியினர் கூடத்திற்கு ஏற்பாடு செய்து இருந்தனர்.
மாநில MGR இளைனர் அணி துணை செயலாளர் சரவணா பெருமாள் அவர்கள் தலைமை தாங்கினார்கள் .மறுமலர்ச்சி திராவிட முனேற்ற கழகம்.CPI,CPM,மூவேந்தர் முனேற்ற கழகம் ஆகிய கட்சிகள் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

Sunday, June 20, 2010

மாபெரும் கண்டன போராட்டம்

உயர் நீதிமன்றத்தில் தமிழ் மொழியை வழக்காடு மொழியாக அனுமதிக்க வேண்டி அண்ணா திராவிட முனேற்ற கழகம் வளகறின்னர் அணி மற்றும் மாணவர் அணி சார்பாக மாபெரும் கண்டன போராட்டம் தூத்துக்குடி இல் நாளை நடைபெறுகிறது .
நாள் : 21-06-2010
இடம் : நீதிமன்ற வளாகம்
நேரம் : காலை 10 மணி
போராட்டத்தில் தோழமை கட்சி நிர்வாகிகளும் கலந்து கொள்கின்றனர்.கழகத்தின் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் அனைவரும் போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு பணியுடன் கேட்டு கொள்கிறேன்.



இவன்
அம்மாவின் முரட்டு பக்தன்
A.B.டேனியல்